ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்

இந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பாடல் மற்றும் சவுண்ட் ட்ராக் ஆகியவற்றுக்காக இந்த விருதுகள் தரப்பட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிறு மாலை (இன்று காலை) நடைபெற்ற 52ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் குல்சார் எழுதி, சுக்விந்தர் பாடிய ‘ஜெய் ஹோ’ பாடல் சிறந்த திரைப்படப் பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இசை சேர்ப்பிற்கான விருதும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
விருதுகளை பெற்றுக்கொண்ட பின்னர் மேடையில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “இந்தியாவுக்கு மீண்டும் முன்னிலை கிடைத்துள்ளது. அதிசயிக்கத்தக்க வகையில் இரண்டு கிராமி விருதுகளை பெற்றிருக்கிறோம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்திருக்கிறார். அவர்உங்களை
ஆசீர்வதிக்கவும் செய்வார்” என்றார்.