Pages

Friday, March 19, 2010

Five pairs in ‘Nanga’, Selva directs

‘நாங்க’… செல்வா இயக்கும் புதிய படம்

85ஆம் ஆண்டு நடக்கும் காதல் கதையை படமாக்குகிறார் இயக்குநர் செல்வா. ‘நாங்க’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் 5 நாயகர்கள், 5 நாயகிகள். ‘நாங்க’ படம் குறித்து இயக்குநர் செல்வா கூறுகையில்,

“வித்தியாசமான காதல் கதை இது. இதில் ஐந்து காதல் கதை இருக்கும. 1985ஆம் ஆண்டில் கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக இதை உருவாக்குகிறோம். அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் விதத்தில் செட், உடைகளை வடிவமைக்க உள்ளோம். இது கற்பனை கதைதான். ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு இது ஏதோ அவர்களுடைய வாழ்க்கையில் நேர்ந்ததுபோல உணர்வார்கள். இதற்காக சினிமா பின்னணி உள்ள கதாநாயகன்களைத் தேடி வருகிறோம். இயக்குநர்கள், நடிகர்களின் மகன்களாக இருந்தால் நன்றாக இருக்கும். கதாநாயகிகள் புதுமுகங்கள்தான். மேலும் அமராவதி படத்துக்குப் பிறகு, ‘நாங்க’ படத்தில் இசையமைப்பாளர் பாலபாரதியுடன் இணைகிறேன். ரசிகர்களுக்கு புது அனுபவத்தை இந்த படம் தரும்” என்றார் செல்வா.

Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com