Pages

Friday, March 19, 2010

Prahbu takes hero role again

மீண்டும் ஹீரோவாகிறார் பிரபு

யாரிப்பாளர்கள், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப கதாநாயகனாக மீண்டும் நடிக்க, தயாராகி வருகிறார் பிரபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு திசைகளில் இருந்தும் வந்து குவியும் குணச்சித்திர வேடங்களை மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார் பிரபு. எப்படி இப்படி மாறினீர்கள் எனக் கேட்டால், பிரபு சொல்கிறார்…

“நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. எனக்காகவே உருவாக்கியது போன்ற கதாபாத்திரங்களோடு இயக்குநர்கள் வரும்போது சம்மதிக்கிறேன். மீண்டும் கதாநாயகனாக நடிக்க சில தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் கேட்கிறார்கள். அதற்கேற்ப உடம்பு இளைக்க வேண்டும் இல்லையா? அதற்காக உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன்” என்பவர்,

“ரஜினியும் கமலும் எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணன்கள் போல. இருவரும் இணைந்து நடிக்கும் படத்தைத் தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் அது எனது பாக்கியம். ஆனால், இதை நான் முடிவு செய்ய முடியாது. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அடக்கம் காட்டுகிறார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “சினிமா எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. கால மாற்றங்களுக்கு ஏற்ப அது மாறிக்கொண்டேதான் இருக்கும். என்றைக்குமே நல்ல படங்களுக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் சென்டிமென்ட் மட்டும் மாறவே மாறாது.

நல்ல கதையோடு வருபவர்களுக்கு சிவாஜி பிலிம்ஸ் நிச்சயம் வாய்ப்பு தரும்” என்றார் பிரபு.

Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com