Pages

Friday, March 19, 2010

Prabhudeva’s name in hand, Nayantara defenses

மக்களுக்குக் கவலை வேண்டாம் :
பிரபு தேவா பெயரை பச்சை குத்தியது குறித்து நயன்














‘பிரபு தேவாவின் பெயரை பச்சை குத்தியது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்கிறவர்களுக்காக நாம் வாழ்கிறோம். இது தான் உண்மை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில் பிரபுதேவா, நயன்தாரா ஜோடியாக ஷாருக்கான் - கஜோல் நடித்த ‘மை நேம் இஸ் கான்’ என்ற இந்திப்படத்தை பார்த்தனர். நேற்று முன்தினம் வந்த காதலர் தினத்தையும் இந்த ஜோடி கலகலவென கொண்டாடி இருக்கிறது. விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நயன்தாரா மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,

“யாரையேனும் எனக்குப் பிடித்துவிட்டால் அவருக்காக நான் எதையும் செய்வேன். பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியது ஏன் என்று பலரும் கேட்கின்றனர். மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்கிறவர்களுக்காக நாம் வாழ்கிறோம். இது தான் உண்மை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். இப்போதைக்கு எனக்கு சினிமாதான் முக்கியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்துக் கொண்டிருக்கிறேன். திருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை” என்று நயன்தாரா கூறியுள்ளார்.

Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com